ஆயர்குல நாயகன் நந்தகோபனின்
காவலனே !
நாயகனாய் நின்ற நந்த
கோபனுடைய
.........கோயில் காப்பானே !
கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம்
தாள்திறவாய் !
.........ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன்
நென்னலே வாய்நேர்ந்தான் !
.........தூயோமாய் வந்தோம் துயிலெழப்
பாடுவான் !
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ!
.........நேய நிலைக்கதவம் நீக்கு ஏல்
ஓர் எம்பாவாய் !
--------------------------------------------------------------------------------------
பொருள்:-
----------------
ஆயர்குல நாயகனாம் நந்தகோபனின் கோயில் காப்பவனே! கொடித் தோரண வாயில் காப்பவனே ! மணிக் கதவைத் திறவாய் ! நாங்கள் ஆயர்குலச் சிறுமியர் வந்திருக்கிறோம். பயப்படாதே !
அந்த மாயன், மணிவண்ணன் எங்கள் நோன்பு நிறைவேற ஒரு பரிசு தருவதாகச் சொல்லி
இருக்கிறான்; அதனால் தான் வைகறையில் நீராடி முடித்து,
தூயவர்களாக வந்திருக்கிறோம். எங்கள் நேயனது
கோயில் நிலைக் கதவைக் கொஞ்சம் திற !
-------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:-
-------------------
நாயகனாய் = தலைவனாக; கொடித் தோன்றும் = கொடிகள் அலங்கரிக்கும்; மணிக் கதவம் = திறந்தால் “சில்”லென்று ஒலிக்கக் கூடிய மணிகள் பொருத்திய கதவு; தாள் = தாழ்ப்பாள்; ஆயர் = ஆயர்குல; சிறுமியரோம்= சிறுமியராகிய எங்களுக்கு; அறை பறை = பரிசு தருவதாகச் சொல்லி;
நென்னலே = நேற்றே; வாய் நேர்ந்தான் = எங்களிடம் உரைத்தான்; தூயோமாய் = நீராடி முடித்துத் தூயவர்களாக; வந்தோம் = வந்திருக்கிறோம்; துயிலெழப் பாடுவான் வாயால் = கண்ணனுக்குத் திருப்பள்ளி எழுச்சிப் பாட வந்துள்ளோம்;
வாயால் முன்ன முன்னம் உன் வாயால் ”விரைவாக வா” என்று ; மாற்றாதே அம்மா = (கோயில் காவலனாகிய) என்னிடம் அடிக்கடி சொல்லாதே அம்மா; நேய = அன்பு கொண்டு; நிலைக்கதவம் நீக்க = கதவின் தாள்
திறந்துவிடுகிறேன்; ஏல் ஓர் எம்பாவாய் ! அப்புறம் நீங்கள்
கண்ணனை போற்றி வணங்கிப் பாடுங்கள் பாவையரே !
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப் பாவை” வலைப்பூ.
[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை)
25]
{08-05-2022}
------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக