எல்லே (HELLO) ! இளங்கிளியே ! நப்பின்னை !
எல்லே !
இளங்கிளியே ! இன்னம் உறங்குதியோ !
.........சில்லென்று
அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன் !
வல்லை உன்
கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்,
.........வல்லீர்கள்
நீங்களே நானேதான் ஆயிடுக !
ஒல்லைநீ
போதாய் ! உனக்கென்ன வேறுடையை
.........எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள் !
வல்லானை, கொன்றானை மாற்றாரை
மாற்றழிக்க
.........வல்லானை, மாயனைப் பாடு ஏல் ஓர்
எம்பாவாய் !
------------------------------------------------------------------------------------
பொருள்:-
-----------------
” அடி பெண்ணே ! எல்லே ! இளங்கிளியே ! இன்னுமா
உறங்குகிறாய் ! “ என்று வெளியில் இருந்து பெண்கள்
கேட்கிறார்கள்.
“ அடி ! சில் வண்டு மாதிரி சத்தம் போடாதீர்கள் ! இதோ, வந்து
விட்டேன் ! “ என்கிறாள் உள்ளே இருக்கிறவள்.
“ தெரியுமடி உன்னை ! நீ பெரிய வாய்த்
துடுக்குக்காரி ! “ என்கிறார்கள் வெளியே நிற்பவர்கள்.
“ நல்லதடி அம்மா ! அது நானாகவே இருக்கட்டும் !
இப்போது என்ன செய்ய வேண்டும் என்கிறாய்?”.
“ ஒன்றுமில்லை ! நீ உடனடியாக எழுந்து வா !
அதுதான் வேண்டும் !”
“ நல்லது ! எல்லோரும் வந்து விட்டீர்களா ?”
“ வந்துவிட்டோம். வந்து எண்ணிப் பார் ! வலிமை
பொருந்திய யானையைக் கொன்றவனை, எதிரிகளை
அழித்த வல்லவனை, மாயவனை எல்லோரும் பாடுவோம் ! வாருங்கள் “
------------------------------------------------------------------------------------
---------------------------
எல்லே ! = அடியேய் ! (ஆங்கிலத்தில் “ஹலோ” (HELLOW): தமிழில் எல்லே ! “ ; இன்னும் உறங்குதியோ = இன்னுமா உறங்குகிறாய் ?; சில்லென்று = சில் வண்டு போல சப்தம் போட்டு; அழையேன்மின் =
என்னை அழைக்காதீர்கள்; நங்கைமீர் =
பெண்களே !;
போதருகின்றேன் = வருகிறேன்; வல்லை உன் கட்டுரைகள் = உறுதியில்லாத உன் பேச்சினைக் கேட்க நாங்கள் வரவில்லை; பண்டே உன் வாயறிதும் = உன்னைப் பற்றி
எங்களுக்கு அந்த நாளிலிருந்தே தெரியும் ; வல்லீர்கள்
நீங்களே = சரி நீங்களே வாருங்களடி ! ; நானேதான்
ஆயிடுக = நான் பேச்சு மாறினவளாகவே இருக்கட்டும்;
ஒல்லை நீ போதாய் = விரைவாக நீ எங்களுடன் வா
!; உனக்கென்ன வேறுடையை = உங்களுக்கென்ன நான்
கருத்து மாறுபாடு உடையவளாகவே இருந்து விட்டுப் போகிறேன்; எல்லாரும்
போந்தாரோ = சரி சரி எல்லோரும் வந்துவிட்டார்களா?; போந்தார் = வந்துவிட்டார்கள்; போந்து = நீயே
வந்து ; எண்ணிக்கொள் = எண்ணிக் கொள்ளடி !;
வல்லானை = வலிமை உடையவனை; மாயனை = மாயச் செயல்கள் புரியும் கண்ணனை; பாடு ஏல்
ஓர் = போற்றிப் பாடி வணங்குவோம் ; எம்பாவாய் =
பதுமை போன்ற அழகிய பெண்ணே !
--------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப் பாவை” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:
2053, மேழம் (சித்திரை) 29]
{12-05-2022}
--------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக